ADDED : பிப் 13, 2025 01:27 AM
அ நிறம் | அளவு
கோவிலில் பூட்டை உடைத்துஉண்டியல் காணிக்கை திருட்டு
கிருஷ்ணகிரி:கல்லாவி அடுத்த ரங்கனுாரை சேர்ந்தவர் முருகன், 55. அப்பபகுதியிலுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலராக உள்ளார். கடந்த, 10ல் இரவு பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றார்.
மறுநாள் காலை வந்தபோது கோவிலின் பூட்டு மற்றும் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை திருடு போனது தெரிந்தது. கோவில் அறங்காவலர் முருகன் புகார் படி, கல்லாவி போலீசார் விசாரிக்கின்றனர்.
