/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கண்ணன்டஹள்ளியில் எருது விடும் திருவிழா
/
கண்ணன்டஹள்ளியில் எருது விடும் திருவிழா
ADDED : பிப் 18, 2025 01:15 AM
கண்ணன்டஹள்ளியில் எருது விடும் திருவிழா
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட் டம், மத்துார் அடுத்த, கண்ணன்டஹள்ளி கிராமத்தில், 60வது ஆண்டு எருது விடும் திருவிழா நேற்று நடந்தது. இதில், கிருஷ்ணகிரி, வேலுார், திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்து, 300 எருதுகள் பங்கு பெற்றன. முதல் பரிசாக 1,75,555 ரூபாய், 2வது பரிசாக, 1,25,555 ரூபாய், 3வது பரிசாக 1,00,555 ரூபாய் என, 75 பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பிட்ட துாரத்தை குறைந்த நேரத்தில் கடந்த எருதுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. எருது விடும் திருவிழாவை காண, 2,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் குவிந்தனர். ஊத்தங்கரை, பர்கூர் சப் டிவிசனுக்கு உட்பட்ட, 50 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

