/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெருகோபனபள்ளியில்எருது விடும் திருவிழா
/
பெருகோபனபள்ளியில்எருது விடும் திருவிழா
ADDED : பிப் 20, 2025 01:39 AM
பெருகோபனபள்ளியில்எருது விடும் திருவிழா
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, பெருகோபனபள்ளி கிராமத்தில், 36வது ஆண்டு எருது விடும் திருவிழா நேற்று நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, வேலுார், திருப்பத்துார் மற்றும், ஆந்திராவில் இருந்தும், 300 எருதுகள் பங்கேற்றன. முதல் பரிசாக, 2 லட்சம் ரூபாய், 2வது பரிசாக, 1.50 லட்சம் ரூபாய், 3வது பரிசாக, 1.25 லட்சம் ரூபாய் என, 100க்கும் மேற்பட்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. குறிப்பிட்ட துாரத்தை குறைந்த நேரத்தில் கடந்த எருதுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இதில், 3,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் அதிகாலை முதலே எருது விடும் திருவிழாவை காண குவிந்தனர். ஊத்தங்கரை சப்டிவிசனுக்கு உட்பட்ட,
50 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.