sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அங்காள பரமேஸ்வரி அம்மனுக்குதிருக்கல்யாண வைபவம்

/

அங்காள பரமேஸ்வரி அம்மனுக்குதிருக்கல்யாண வைபவம்

அங்காள பரமேஸ்வரி அம்மனுக்குதிருக்கல்யாண வைபவம்

அங்காள பரமேஸ்வரி அம்மனுக்குதிருக்கல்யாண வைபவம்


ADDED : மார் 03, 2025 01:46 AM

Google News

ADDED : மார் 03, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அங்காள பரமேஸ்வரி அம்மனுக்குதிருக்கல்யாண வைபவம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா கடந்த மாதம், 25ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 26ல் மகா சிவராத்திரியும், 27ல், மயான கொள்ளை நிகழ்ச்சியும், 28ல், அம்மனுக்கு தாலாட்டும், நேற்று முன்தினம் தீமிதி விழாவும் நடந்தது.

நேற்று பகல், 12:00 மணிக்கு, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கும், சிவனுக்கும் சிறப்பு யாகம் வளர்த்து, மந்திரங்கள் முழங்க, அம்மையப்பனுக்கு பட்டாடை உடுத்தி, மாலை மாற்றி திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மையப்பன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில், 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் சீர்வரிசைகளுடன் கலந்து கொண்டு, அம்மனுக்கு மொய்

எழுதினர். திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு, புடவை மற்றும் மங்கல பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

மாலை, 5:00 மணிக்கு, அம்மையப்பன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இன்றிரவு, 7:00 மணிக்கு, கும்ப பூஜை, அன்னதானம், கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.






      Dinamalar
      Follow us