/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவி பாலியல் பலாத்காரம்தொழிலாளி தலைமறைவு
/
மாணவி பாலியல் பலாத்காரம்தொழிலாளி தலைமறைவு
ADDED : மார் 09, 2025 01:39 AM
மாணவி பாலியல் பலாத்காரம்தொழிலாளி தலைமறைவு
போச்சம்பள்ளி:மத்துார் அருகே, ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் சங்கர், 48. தேங்காய் வெட்டும் தொழிலாளி. இவர், அரசு பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும், 13 வயது மாணவியை மிரட்டி, 6 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். கடந்த, 2 நாட்களுக்கு முன், மாணவி படிக்கும் பள்ளியில், 'குட், பேட் டச்' குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம் மாணவி, தன்னிடம் கடந்த, 6 மாதங்களுக்கு மேலாக, தொழிலாளி சங்கர் மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தலைமையாசிரியரிடம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து தலைமையாசிரியர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சரவணன் மற்றும் மத்துார் போலீசில் புகார் அளித்தார். அதன்படி விசாரணை நடத்திய போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து, தலைமறைவான தொழிலாளி சங்கரை தேடி வருகின்றனர்.