/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
/
சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 12, 2026 06:44 AM
கிருஷ்ணகிரி:தமிழ்நாடு
சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கிருஷ்ணகிரி
மாவட்ட சுகாதார அலுவலகம் முன், பல்-வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட
ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், பாஸ்கர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் கவியரசன், மாநில துணைத்தலைவர் தினேஷ், மாநில
செயலாளர் கந்தசாமி ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். தணிக்கையாளர்
ஜெய-சீலன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், சுகாதார
ஆய்வாளர்கள் பதவி உயர்வு கோரிக்கை தொடர்பான பேச்சு வார்த்தையில் ஏற்ற
முடிவுகளை செயல்படுத்த வேண்டும். தொழுநோய் ஒழிப்பு திட்ட
பணியி-டங்களை என்.எம்.எஸ்., மற்றும் டி.எச்.இ., பணியிடங்களை இல்லாமல்
செய்யும் உள்நோக்கத்தோடு செயல்படுத்துவதை வன்மையாக
கண்டிப்பது.
சுகாதார ஆய்வாளர் நிலை - 2, புதிய பணி நியமனத்தில்
உரிய அக்கறை செலுத்த வேண்டும். சுகாதார ஆய்வாளர்கள் பணிய-மைப்புக்கு
எதிராகவும், அலட்சிய போக்குடனும் செயல்படும் பொது சுகாதாரத்துறை
இயக்குனரகத்தை வன்மையாக கண்-டித்தும், கண்டன கோஷங்களை
எழுப்பினர்.

