/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எருது விடும் விழா9 பேர் மீது வழக்கு
/
எருது விடும் விழா9 பேர் மீது வழக்கு
ADDED : மார் 07, 2025 02:18 AM
எருது விடும் விழா9 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி எடுத்த பெல்லாரம்பள்ளி மாரியம்மன் கோவில் அருகே, நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இதுகுறித்து, பெல்லாரம்பள்ளி வி.ஏ.ஓ., வெங்கடேசன் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், எருது விழா ஏற்பாட்டாளர்கள் ராஜா, 40, மற்றும், 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். அதேபோல, கந்திகுப்பம் அடுத்த தேசுப்பள்ளி பெருமாள் கோவில் அருகே, அனுமதியின்றி எருது விடும் விழா நடந்தது குறித்து, வரட்டனப்பள்ளி வி.ஏ.ஓ., பாலசுப்பிரமணி புகார் படி, கந்திகுப்பம் போலீசார், விழா ஏற்பாட்டாளர்கள் சரவணன், 55, மற்றும், 3 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.