sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

/

அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 18, 2024 07:36 AM

Google News

ADDED : செப் 18, 2024 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நலமீட்பு சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணை பொதுச்செயலாளர் ராஜகோபால் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், பணி ஓய்வு பெற்று, 2 ஆண்டுகளாகியும் ஓய்வுகால பணப்பலன்களை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். 9 ஆண்டுகளாக, 95,000 ஓய்வு பெற்றவர்களின் வாழ்வாதாரமான பஞ்சப்படி உயர்வு வழங்காமல், தமிழக அரசு மெத்தனமாக உள்ளது. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் அதிகாரிகள் உதாசீனப்படுத்தி வருகின்றனர். 25 ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வூதிய உயர்வுகளே வழங்காமல், முதல்வரின் விரிவான மருத்துவத்திட்டம் வழங்காமல் வஞ்சிக்கின்றனர்.

நிதி பொறுப்பாட்சி ஓய்வூதிய திட்டத்தை அரசே ஏற்று நடத்தக் கோரியும், பணியில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்காமல், காலம் தாழ்த்தியும் வருகின்றனர். 2003 ஏப்., 1க்கு பின், பணியில் சேர்ந்தவர்களையும் பென்சன் திட்டத்தில் இணைக்க வேண்டும். போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை பணி அமர்த்தக்கூடாது, என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மண்டல தலைவர் சுந்தரம், மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத்தலைவர் நாகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us