/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பைனான்ஸ் அலுவலகத்தை சூறையாடிய இருவருக்கு வலை
/
பைனான்ஸ் அலுவலகத்தை சூறையாடிய இருவருக்கு வலை
ADDED : ஆக 08, 2024 05:45 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை கோட்டைவாசலை சேர்ந்தவர் அசோக்-குமார், 37; தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் கலெக்ஷன் ஏஜன்-டாக உள்ளார்.
நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை அண்ணா நகரை சேர்ந்த சரத்குமார், 35, என்பவரிடம், பைக் கடனை வசூ-லிக்க சென்றார். அவர் இல்லாததால், போன் செய்து பணத்தை கேட்டுள்ளார். பணம் செலுத்த மறுத்த சரத்குமார், தேன்கனிக்-கோட்டை மாதாகோவில் தெருவை சேர்ந்த குள்ளன், 30, என்பவ-ருடன், தேன்கனிக்கோட்டை வனத்துறை சோதனைச்சாவடி அருகே உள்ள, பைனான்ஸ் அலுவலகம் சென்று, அசோக்கு-மாரை தாக்கி, அவரது மொபைல்போனை உடைத்ததுடன், நிறு-வன கட்டட கண்ணாடிகளை சேதப்படுத்தினார். அசோக்குமார் புகார் படி, தேன்கனிக் கோட்டை போலீசார் சரத்குமார், குள்ளன் ஆகியோரை தேடி வருகின்றனர்.