/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பரிசு கூப்பன் ஆசை காட்டி ரூ.17.97 லட்சம் மோசடி
/
பரிசு கூப்பன் ஆசை காட்டி ரூ.17.97 லட்சம் மோசடி
ADDED : செப் 02, 2024 03:25 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, பரிசு கூப்பன் ஆசை காட்டி, பெண்ணிடம், 17.97 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தை சேர்ந்தவர் ஷீலா, 38, டைலர்; குறிப்பிட்ட இணையதளம் மூலம், தன் கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதை வழக்கமாக கொண்டி-ருந்தார். இந்நிலையில் ஷீலாவுக்கு ஒரு கடிதம் வந்தது.
அதில், இணையதளத்தின் பரிசு கூப்பன் வந்துள்ளது. அதன் மதிப்பு, 15.51 லட்சம் ரூபாய். அதை பெற்று கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது. கடிதத்தில் இருந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். பரிசு கூப்பன்
பணத்தை பெற, ஜி.எஸ்.டி., மற்றும் நடைமுறை செலவுக்கான பணத்தை செலுத்-தினால், பணத்தை பெறலாம் என்ற கூறியுள்ளனர். இதை நம்பிய ஷீலா, அவர்கள் கூறிய வங்கி கணக்குக்கு பல தவ-ணைகளில் மொத்தம், 17.97 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். ஆனால், பரிசு கூப்பனுக்கான பணம் வரவில்லை. சந்தேகம-டைந்த ஷீலா, தான் பேசிய மொபைல்
எண்ணை தொடர்பு கொண்டபோது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த ஷீலா புகார் படி, கிருஷ்ண-கிரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா விசாரித்து வருகிறார்.