/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் வருஷாபிஷேக விழா
/
ஜெயவீர ஆஞ்சநேயர் கோவிலில் வருஷாபிஷேக விழா
ADDED : செப் 02, 2024 02:34 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே கலுகோபசந்திரம் பஸ் ஸ்டாப் அருகே, ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு முதலா-மாண்டு வருஷாபிஷேக விழா கடந்த, 31ல் துவங்கியது.
தினமும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன. விழாவையொட்டி நேற்று காலை கடம் புறப்-பாடு, கலசாபிஷேகம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு கிராமங்-களில் இருந்து சுவாமி சிலைகள் கொண்டு வரப்பட்டு பச-வண்ணா பூஜை நடந்தது. தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்-திரன் மற்றும் பெனசப்பள்ளி, மல்லசந்திரம், கலுகோபசந்திரம், மாரேகவுண்டன்பள்ளி, டி.கொத்தனுார் சுற்றுப்புற கிராம
மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.