ADDED : ஜன 18, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுந்து தொழிலாளி பலி
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே கானலட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ்,28; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, ஆழியாளம் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் கை, கால்களை சுத்தம் செய்ய முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். உத்தனப்பள்ளி போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.