ADDED : பிப் 13, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்நோக்கு கட்டடம் திறப்பு
ஊத்தங்கரை:ஊத்தங்கரை அடுத்த புதுார் புங்கனை பஞ்., ஒட்டம்பட்டி கிராமத்தில், 2023, 2024 நிதியாண்டு, ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய பல்நோக்கு கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது.
ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமை வகித்து. புதிய கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். புதிய கட்டடத்தில், பகுதிநேர ரேஷன்கடை திறக்கப்பட்டது. இதில், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தெற்கு வேங்கன், வடக்கு வேடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.