sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மயான கொள்ளைகொடியேற்றத்துடன் துவக்கம்

/

மயான கொள்ளைகொடியேற்றத்துடன் துவக்கம்

மயான கொள்ளைகொடியேற்றத்துடன் துவக்கம்

மயான கொள்ளைகொடியேற்றத்துடன் துவக்கம்


ADDED : பிப் 26, 2025 01:20 AM

Google News

ADDED : பிப் 26, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயான கொள்ளைகொடியேற்றத்துடன் துவக்கம்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, பழையபேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, காலை, 10:30 மணிக்கு, ஹோமத்துடன் கொடிமரத்திற்கு பூஜை செய்து, கோவிலை சுற்றி வலம் வந்து, காப்புக் கட்டுதலுடன் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, முளைப்பாரி எடுத்தல், யாகசாலை பிரவேசம், அக்னிமுகம், மகா கணபதி ஹோமம், அஷ்ட திக்பாலகர் பூஜை ஆகியவை நடத்தி, அம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், இரவு, 7:00 மணிக்கு, பக்தி பாடல் நிகழ்ச்சியும் நடந்தது.

இன்று காலை, 8:00 மணிக்கு, மஹாசிவராத்திரியை முன்னிட்டு, சக்தி கரகம், பச்சை கரகம் எடுத்து கங்கையில் நீராடி விட்டு சன்னதி பிரவேசம் அடைகின்றனர். நாளை காலை, முகவெட்டு மயானத்திற்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியும், 5:30 மணி முதல், பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு வேண்டுதல் நிறைவேற்ற உள்ளனர். மதியம், பூத வாகனத்தில் அம்மன் மயான கொள்ளைக்கு புறப்படும் நிகழ்ச்சியும், இரவு, அம்மன் திருத்தேர் நகர்வலமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர் மற்றும் பருவதராஜகுல மீனவர் சமுதாயம் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us