/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாற்றுத்திறனாளிகளுக்குநலத்திட்ட உதவி வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்குநலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : மார் 04, 2025 01:34 AM
மாற்றுத்திறனாளிகளுக்குநலத்திட்ட உதவி வழங்கல்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 431 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 1,756 ரூபாய் மதிப்பில் பிரைலி கடிகாரங்கள், 300 ரூபாய் மதிப்பில் மடக்கு குச்சிகள், 141 ரூபாய் மதிப்பில் கண்ணாடிகள் என மொத்தம், 2,197 ரூபாய் மதிப்பில், 13 மாற்றுத்திறனாளிகளுக்கு, 28,561 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா, அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.