/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உணவு பாதுகாப்பு துறைஊத்தங்கரையில் சோதனை
/
உணவு பாதுகாப்பு துறைஊத்தங்கரையில் சோதனை
ADDED : ஏப் 02, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உணவு பாதுகாப்பு துறைஊத்தங்கரையில் சோதனை
ஊத்தங்கரை:ஊத்தங்கரையில், நடமாடும் உணவு பகுப்பாய்வு ஆய்வக வாகனம் வரவழைக்கப்பட்டு பேக்கரி, ஹோட்டல், மளிகைக்கடை என, 33 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் லட்சுமி, ரமேஷ், சந்தோஷ்குமார் ஆகியோர் சோதனை செய்தனர்.
அப்போது டீ கடை, பேக்கரிகளில் சாயம் ஏற்றப்பட்ட டீ துாள், 3 கிலோ கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. முறையான லேபிள் விபரம் இல்லாத பிரட் பாக்கெட்டுகள், கார வகைகள், 5 கிலோ, குளிர்பானம், 50 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. 7 உணவு வணிகர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. 5 உணவு வணிகர்களுக்கு, 1,000 ரூபாய் வீதம், 5,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது.

