sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ யானைகளால் வாழை தோட்டம் நாசம்

யானைகளால் வாழை தோட்டம் நாசம்

யானைகளால் வாழை தோட்டம் நாசம்


ADDED : ஏப் 09, 2025 01:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 01:32 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

யானைகளால் வாழை தோட்டம் நாசம்

தேன்கனிக்கோட்டை:தளி அருகே, வாழை தோட்டத்திற்குள் புகுந்த யானைகளால், 100க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் வீணாகின.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே கும்ளாபுரம் வனத்திலிருந்து வெளியேறிய, 3 யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு ஆருப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிரெட்டி என்பவரது வாழை தோட்டத்திற்குள் புகுந்து, வாழை மரங்களை நாசம் செய்த யானைகளால், 100க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் வீணாகின. அதேபோல், சதீஷ்ரெட்டி என்பவரது, 2.50 ஏக்கர் வெள்ளரி தோட்டம், நாராயணரெட்டியின் தோட்டத்தில் பறித்து வைத்திருந்த, 20 மூட்டை சுரைக்காய் ஆகியவற்றை யானைகள் தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தன. நேற்று காலை விவசாய நிலத்திற்கு சென்ற விவசாயிகள், பயிர்கள் சேதமாகி இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். யானைகள் நடமாட்டம் குறித்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தாலும், கண்டுகொள்வதில்லை என, விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

தளி சுற்றுப்புற கிராமங்களில், யானைகள் தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அரசு உடனடியாக இழப்பீட்டை வழங்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us