தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டுரூ.2 லட்சம் மதிப்பு மதுபானம் திருட்டு

டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டுரூ.2 லட்சம் மதிப்பு மதுபானம் திருட்டு

டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டுரூ.2 லட்சம் மதிப்பு மதுபானம் திருட்டு


ADDED : ஏப் 02, 2025 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 02, 2025 01:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டுரூ.2 லட்சம் மதிப்பு மதுபானம் திருட்டு

தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அடுத்த திம்மசந்திரம் அருகே, சுரேஷ் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில், டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. தேன்கனிக்கோட்டையை சேர்ந்த மூர்த்தி, 47, விற்பனையாளராக உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு வீட்டிற்கு சென்றனர். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள், டாஸ்மாக் கடைக்கு வெளியே வைத்திருந்த, 'சிசிடிவி' கேமராக்களை வேறு புறமாக திருப்பி விட்டு, கடையின் பின்பக்க சுவற்றை உடைத்து ஓட்டை போட்டு உள்ளே புகுந்தனர்.

கடையில் இருந்த விலை உயர்ந்த, 16 பெட்டிகளில் இருந்த மதுபானங்கள், பீர்பாட்டில்களை திருடி சென்றனர். இதன் மதிப்பு, 2 லட்சம் ரூபாய் வரை இருக்கும்.

நேற்று காலை, 9:30 மணிக்கு கடையை திறக்க வந்த ஊழியர்கள், சுவற்றில் துளை போடப்பட்டு மதுபானம் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. டி.எஸ்.பி., ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தேன்கனிக்கோட்டை போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us