/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
/
பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
ADDED : ஜூலை 26, 2011 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் அடுத்த மத்திகிரி முனிஸ்வரன் கோவில் அருகே சிலர் சீட்டாடுவதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.
எஸ்.ஐ., ரஜினி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சீட்டு விளையாடியவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (34), பிதோஷ் (24), பாட்ஷா (30) என்பது தெரிந்தது. அவர்களை போலீஸார் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த சீட்டு கட்டுகள், ரொக்க பணம் 1.000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.