நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுவன், பெண் மாயம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே வசிப்பவர், 15 வயது சிறுவன்; கடந்த, 2 காலை, 11:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுவன் மாயமானார். அவரது தந்தை நல்லுார் போலீசில் கொடுத்த புகார்படி, போலீசார் தேடி வருகின்றனர்.
தளி அருகே தேவர்பெட்டா கிராமத்தை சேர்ந்தவர் கவுரம்மா, 45. இவர் குடும்ப தகராறு காரணமாக கடந்த, 23 ஆண்டுகளுக்கு முன் தனது கணவரை பிரிந்து, தந்தையுடன் வாழ்ந்து வருகிறார்; கடந்த, 5 காலை, 10:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது தந்தை முருகப்பா, 75, கொடுத்த புகார்படி, தளி போலீசார் தேடி வருகின்றனர்.