ADDED : மார் 25, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு பள்ளியில்முப்பெரும் விழா
ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, நாப்பிராம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா, இப்பள்ளியில் படித்து, மருத்துவ படிப்பு படித்து வரும் மாணவர்களுக்கு பாராட்டு விழா, பள்ளி ஆண்டு விழா என முப்பெரும் விழா நேற்று நடந்தது.
உதவி தலைமை ஆசிரியர் நர்மதா வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி தலைமை வகித்தார். மாரம்பட்டி முன்னாள் பஞ்., தலைவர் ஜீவானந்தம், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார கல்வி அலுவலர்கள் சீனிவாசன், லோகேஷா, சாந்தி ஆகியோர் பேசினர். தொடர்ந்து, மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு,
பரிசுகள் வழங்கப்பட்டன.