sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

யானைகளால் பயிர்கள் நாசம்

/

யானைகளால் பயிர்கள் நாசம்

யானைகளால் பயிர்கள் நாசம்

யானைகளால் பயிர்கள் நாசம்


ADDED : ஏப் 06, 2025 01:03 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யானைகளால் பயிர்கள் நாசம்

தேன்கனிக்கோட்டை:ஓசூர் வனக்கோட்டம், ஜவளகிரி வனச்சரகத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு வெளியேறிய, 3 யானைகள், தளி அருகே கோட்டை மடுகு பஞ்., உட்பட்ட அனுமந்தபுரம் கிராமத்திற்கு வந்தன. அப்பகுதி நிலங்களுக்குள் புகுந்த யானைகள், கோவிந்தரெட்டி, வினய், யசோதம்மா ஆகியோரது, தலா ஒரு ஏக்கர் தக்காளி தோட்டம், பிரமிளம்மா, பைய்யாரெட்டி என்பவரது ஒன்றரை ஏக்கர் நெல் வயல்களை சேதப்படுத்தின. வனத்துறையினர் யானைகளை விரட்டாமல், மெத்தன போக்குடன் இருப்பதால் பயிர்கள் சேதமாகி வருவதாக, விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

அதேபோல், உனிசேநத்தம் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் என்பவரது சாமந்தி தோட்டத்திற்குள் புகுந்த யானைகள், பயிர்களை சேதப்படுத்தின. சேதமான பயிர்களுக்கு வனத்துறையினர் உடனடியாக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், யானைகள் விவசாய நிலங்களுக்குள் வருவதை வனத்துறையினர் தடுக்கவும், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us