/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : செப் 13, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒகேனக்கல், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏற்கனவே, அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ்., உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளதால், அணைகளின் பாதுகாப்பு கருதி, உபரி நீர் அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று காலை, 6:00 மணிக்கு வினாடிக்கு, 15,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு, 18,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, மெயின் பால்ஸ், சினி அருவி, ஐந்தருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.