ADDED : ஏப் 04, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
கிருஷ்ணகிரி:காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டஹள்ளி வி.ஏ.ஓ., வனஜா மற்றும் அலுவலர்கள் தீர்த்தமலை மலையடிவாரம் அங்கினாம்பட்டி கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் எம்.சாண்ட் கடத்தப்பட்டது தெரிந்தது. புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
அதேபோல பர்கூர் அடுத்த சிகரலப்பள்ளி வி.ஏ.ஓ., ஜெயபிரகாஷ் மற்றும் அலுவலர்கள் தபால்மேடு கூட்ரோடு அருகே சென்றனர். அங்கு நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் எம்.சாண்ட் கடத்த முயன்றது தெரிந்தது. பர்கூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

