/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சதுர்த்தியில் விநாயகர் சிலை வைக்க பர்கூரில் ஆலோசனை கூட்டம்
/
சதுர்த்தியில் விநாயகர் சிலை வைக்க பர்கூரில் ஆலோசனை கூட்டம்
சதுர்த்தியில் விநாயகர் சிலை வைக்க பர்கூரில் ஆலோசனை கூட்டம்
சதுர்த்தியில் விநாயகர் சிலை வைக்க பர்கூரில் ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 02, 2024 02:33 AM
கிருஷ்ணகிரி: விநாயகர் சிலை வைப்பது குறித்து பர்கூரில் டி.எஸ்.பி., தலை-மையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் மற்றும் கந்திகுப்பம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில், விநாயகர் சதுர்த்தியை முன்-னிட்டு, சிலை வைப்பது, பாதுகாப்பது மற்றும் சிலைகள் கரைக்கும் நாளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, விநாயகர் சிலை வைப்பவர்களுடன், நேற்று பர்கூரில் ஆலோ-சனை கூட்டம் நடந்தது.
டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன் தலைமை வகித்து, ஆலோசனை வழங்கி பேசுகையில், ''களிமண்ணால் ஆன சிலைகளை மட்-டுமே வைக்க வேண்டும். சிலை வைப்பவர்களே பாதுகாப்பு கமிட்டி அமைத்து, சிலைகளை பாதுகாத்து
கொள்ள வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் வகையில் உள்ள பொருட்களை, சிலையின் அருகில் வைக்கக்கூடாது. பூஜை நேரங்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்ட அளவு ஒலிபெ-ருக்கியை பயன்படுத்த வேண்டும். கூம்பு வடிவ ஒலிபெருக்கியை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. கண்காணிப்பு கேமராக்களை கண்டிப்பாக பொருத்த வேண்டும்.
எக்காரணத்தை கொண்டும் தேசிய நெடுஞ்சாலைகளில், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லக்கூடாது,'' என்றார்.