ADDED : ஜூலை 19, 2024 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் கர்நாடகா எல்லையில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. இதனால் கிருஷ்-ணகிரி நகராட்சி பகுதியிலுள்ள பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், நகராட்சிக்கு உட்பட்ட 30வது வார்டு லண்டன் பேட்டை நாயுடு தெருவில், நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு, நகராட்சி தலைவர் பரிதா நவாப், மற்றும் நகராட்சி பணியா-ளர்கள், பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்பு-ணர்வு நோட்டீசை வழங்கினர். அப்பகுதியில் கொசுவை ஒழிக்க இயந்திரங்கள் மூலம் புகை மருந்தும் அடிக்கப்பட்டது. தொடர்ந்து, நகர் முழுவதும் புகை மருந்து அடிக்கப்பட்டு வருகி-றது.