ADDED : ஜூலை 08, 2024 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி துாய பாத்திமா அன்னை திருத்தல ஆலயத்தில், 51ம் ஆண்டு தேர்த்திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடி ஏற்-றத்துடன் துவங்கியது.
இதையொட்டி ஆலயத்தின் முன்பு புதி-தாக அமைத்துள்ள கொடி கம்பத்தில், திருவிழா கொடியை, தர்ம-புரி மறைமாவட்ட முதன்மை குரு அருள்ராஜ், மத்திரித்து ஏற்றி வைத்தார். முன்னதாக, ஆலயத்தில் பங்குத்தந்தை இசையாஸ் முன்னிலையில், நவநாள் ஜெபம் மற்றும் கூட்டுத்திருப்பலி நடந்-தது. இதில், 2,000க்கும் மேற்பட்ட கிறிஸ்துவ மக்கள் பங்கேற்-றனர். தொடர்ந்து, 9 நாட்கள் இந்த தேர்த்திருவிழா நடக்க உள்-ளது.