ADDED : ஜூலை 06, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி அடுத்த கொய்யன்கொட்டாயை சேர்ந்தவர் ரோஷினி, 21. கடந்த, 30ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காண-வில்லை. இது குறித்து ரோஷினியின் கணவர் அஜித், கிருஷ்ண-கிரி டவுன் போலீசில் புகாரளித்தார். அதில், துவாரகாபுரியை சேர்ந்த சின்னமுத்து, 27, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.