/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேசிய மின்சார பாதுகாப்பு வார விழா பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு
/
தேசிய மின்சார பாதுகாப்பு வார விழா பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு
தேசிய மின்சார பாதுகாப்பு வார விழா பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு
தேசிய மின்சார பாதுகாப்பு வார விழா பள்ளி மாணவியருக்கு விழிப்புணர்வு
ADDED : ஜூலை 03, 2024 07:54 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம், 26 முதல் நேற்று வரை, மின்வாரியத்துறை சார்பில், தேசிய மின்சார பாதுகாப்பு வாரம், மாவட்டத்திலுள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் கொண்-டாடப்பட்டது.
அதன்படி இறுதி நாளான நேற்று, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், தேசிய மின்சார பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை
வகித்தார்.
தமிழ்நாடு அரசு மின் ஆய்வுத்துறையின் கிருஷ்ணகிரி மற்றும் தர்-மபுரி மாவட்ட மின் ஆய்வாளர் பொறியாளர் செந்தில்குமார், மாணவியருக்கு, 'மழை காலங்களில் மின் பாதுகாப்பு' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கி பேசு-கையில், ''மின் கம்பிகளின் அருகில் பட்டங்களை பறக்க விடக்
கூடாது. பவர் பிளக்கினுள் கைவிரல், குச்சி, கம்பி போன்ற-வற்றை நுழைக்கக்கூடாது. எந்த திரவத்தையும் பயன்படுத்தி சுவிட்சுகளை சுத்தம் செய்யக்கூடாது. ஈரமான நிலையில், மின் சாதனங்களை இயக்க வேண்டாம்''
என்றார்.
நிகழ்ச்சியில், மின் ஆய்வாளர் அலுவலக கண்காணிப்பாளர் சத்தி-யசீலன், உதவியாளர் யாசின்
முகம்மது, ஆற்றல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் நயாஷ் உல்லா, செல்வக்குமார் மற்றும் மாணவியர் பங்கேற்றனர்.