/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
/
கால பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED : ஜூலை 29, 2024 02:04 AM
கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி அருகே, கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியி-லுள்ள காலபைரவர் கோவிலில், நேற்று தேய்பிறை அஷ்டமியை-யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. காலை, 7:00 மணிக்கு, கண-பதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும், சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. உற்சவர் கால-பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடு-களை, 165 கிராமங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் காலபைரவர் கோவில் மற்றும் சூரன்குட்டை தட்சிண காலபைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.