/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு ஆடவர் கலை கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு
/
அரசு ஆடவர் கலை கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு
அரசு ஆடவர் கலை கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு
அரசு ஆடவர் கலை கல்லுாரியில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு
ADDED : ஜூலை 07, 2024 05:55 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, அரசு ஆடவர் கலை கல்லுாரி முதல்வர் அனுராதா வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்-லுாரியில், நடப்பாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு விவரம் www.gacmenkrishnagiri.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்சி., - கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், புள்ளி-யியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல் ஆகிய அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு வரும், 8ல் (திங்கட்கி-ழமை)- கலந்தாய்வு நடக்கிறது.
பி.காம்., பி.பி.ஏ., பி.ஏ. வரலாறு, பொருளியல் ஆகிய பாடப்பிரி-வுகளுக்கு, 9ம் தேதி, பி.ஏ.. தமிழ், பி.லிட்., தமிழ், பி.ஏ. ஆங்-கிலம் ஆகிய மொழிப் பாடப் பிரிவுகளுக்கு வரும், 10ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது. தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் கலந்தாய்வு நாள், நேரம் உள்ளிட்ட விபரங்கள் அவர்களது மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் மாற்றுச்சான்றிதழ், பள்ளி மதிப்பெண் பட்டியல், ஜாதிசான்றிதழ், வருமான சான்றிதழ், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார், வங்கி கணக்கு புத்-தக முதல் பக்க நகல் உள்ளிட்டவைகளுடன் வர வேண்டும். கலைப்பிரிவுக்கு, 2,795 ரூபாய், அறிவியல் பிரிவுக்கு, 2,815 ரூபாய், கணினி பிரிவுக்கு, 1,915 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.