/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்
/
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.3 கோடிக்கு வர்த்தகம்
ADDED : பிப் 24, 2025 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: ஆடி மாதத்தில் விதைத்து தை, மாசி மாதங்களில் அறுவடை செய்யப்படும் அவரை, துவரை, தழனி, உளுந்து, பச்சை பயறு உள்ளிட்ட பலவகை தானியங்கள் அறுவடை செய்யப்பட்டு வரு-கிறது.
நேற்று கூடிய போச்சம்பள்ளி வாரச்சந்தையில் அவரை, துவரை, தழனி உள்ளிட்ட தானியங்கள், 100 டன்னிற்கு மேலாக விற்ப-னைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அதை வாங்க, சேலம் லீபஜாரிலிருந்து வியாபாரிகளும், சுற்று வட்டார பகுதிகளிலிருந்து பொதுமக்கள், குடும்ப பெண்கள் என, 2,000க்கும் மேற்பட்டோர் வீட்டு உபயோகத்திற்கும், வியாபாரத்-திற்கும் வாங்க குவிந்ததால், 3 கோடி ரூபாய்க்கு மேல் தானி-யங்கள் விற்பனையாகின.

