ADDED : ஜூன் 22, 2024 02:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி
மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, காரப்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள
பெட்டிக்கடையில், மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கள்ளத்தனமாக
கூடுதல் விலைக்கு விற்பனை செய்த கருமாண்டபதியை சேர்ந்த முருகேசன்,
59, குணா, 54, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து,
125 பீர் பாட்டில், 50 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல் செய்து, விற்பனை
செய்த இருவரை ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் கந்தவேல் கைது செய்தார்.