ADDED : செப் 20, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை,கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பேரூராட்சி அலுவலக வளாகத்தில், மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் தலைமை வகித்தார்.
இளநிலை பொறியாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். துாய்மையே சேவை என்னும் இயக்கத்திற்கு உறுதி மொழி எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், பேரூராட்சி அலுவல பணியாளர்கள், துாய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.