ADDED : ஏப் 01, 2026 06:28 AM
அ நிறம் | அளவு
ஈரோடு,
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் குண்டம், தேர் திருவிழாவில் இன்று, நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில், பெரிய மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தக்குடம் எடுத்து சென்று தரிசனம் செய்ய உள்ளனர்.
இதற்காக காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வெயில் தாக்கத்தால் காய்கறி வரத்து குறைய துவங்கி உள்ளது. இதனால் விலை அதிகரித்து வருகிறது. நேற்று கருப்பு அவரை கிலோ, ரூ.120, பட்டை அவரை கிலோ, ரூ.100, வெண்டைக்காய், 80 ரூபாய்க்கு விற்றது.
