/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு
/
100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு
ADDED : ஏப் 04, 2024 05:02 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சியில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நடந்தது. கிருஷ்ணகிரி, ஆர்.டி.ஓ., பாபு பேரணியை துவக்கி வைத்தார். நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி நகராட்சியில் தொடங்கிய பேரணி பழையபேட்டை காந்தி சிலை, பழைய பஸ் ஸ்டாண்ட், காந்தி சாலை வழியாக மீண்டும் நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பதாகைகளுடனும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் நகராட்சி ஊழியர்கள் வழங்கினர்.
கிருஷ்ணகிரி தாசில்தார் சுப்பிரமணி, சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர் தாமோதரன், இளநிலை பொறியாளர்கள், இளநிலை உதவியாளர் பிரபு மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

