ADDED : செப் 17, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
2 இளம்பெண்கள் மாயம்
போச்சம்பள்ளி, செப். 17-
போச்சம்பள்ளி அடுத்த, வேடர்தட்டக்கல் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 48; இவரின் மனைவி திலகவதி, 42; இவர்களுக்கு, 5 மகள்கள். அதில் முதல், 3 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. 4வது மகள் நித்யா, 20, போச்சம்பள்ளி சிப்காட்டிலுள்ள ஓலா மின் வாகன தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி கடந்த, 3 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.
இவரின், 17 வயது தங்கை பிளஸ் 2 படித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு இவர்கள் இருவரும் மாயமாகினர். தாய் திலகவதி புகார் படி, போச்சம்பள்ளி போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.