sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

துணிக்கடையில் தீ விபத்து ரூ.20 லட்சம் பொருள் நாசம்

/

துணிக்கடையில் தீ விபத்து ரூ.20 லட்சம் பொருள் நாசம்

துணிக்கடையில் தீ விபத்து ரூ.20 லட்சம் பொருள் நாசம்

துணிக்கடையில் தீ விபத்து ரூ.20 லட்சம் பொருள் நாசம்


ADDED : ஜூலை 26, 2024 10:07 PM

Google News

ADDED : ஜூலை 26, 2024 10:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியை சேர்ந்த சுல்தான் ஷெரிப், வேப்பனஹள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகே 'ஆதம் டெக்ஸ்டைல்' என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருகிறார். கீழ்தளத்தில் பெண்களுக்கும், முதல் தளத்தில் ஆண்களுக்கான துணிகள் மற்றும் கிடங்கு உள்ளது. சுல்தான் ஷெரிப் நேற்று முன்தினம் இரவு கடையை மூடி சென்றுள்ளார்.

நேற்று காலை, 6:00 மணிக்கு கடையிலிருந்து கரும்புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் கடை தீப்பிடித்து மளமளவென எரிந்தது. கிருஷ்ணகிரி, பர்கூர் தீயணைப்பு நிலைய வாகனங்களில், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

விபத்து ஏற்பட்ட துணிக்கடை நெருக்கமான பகுதியில் இருந்தது. அருகிலேயே தனியார் மருத்துவமனை உள்ளது. தீயணைப்பு வீரர்கள், மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்த போதும், அருகிலுள்ள கடைகளும் சிறிதளவு பாதிக்கப்பட்டன. தனியார் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்தில், துணிக்கடையின் இரு தளங்களிலும் இருந்த துணிகள் முற்றிலும் கருகி நாசமாகின. மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது வேறேதும் காரணமா என்பது குறித்து வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் மற்றும் பொருட்கள் நாசமானதாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us