/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மலை கிராமத்தில் இரவில் பிரசவ வலியில் துடித்த பழங்குடி பெண்ணை காப்பாற்றிய மருத்துவக்குழு
/
மலை கிராமத்தில் இரவில் பிரசவ வலியில் துடித்த பழங்குடி பெண்ணை காப்பாற்றிய மருத்துவக்குழு
மலை கிராமத்தில் இரவில் பிரசவ வலியில் துடித்த பழங்குடி பெண்ணை காப்பாற்றிய மருத்துவக்குழு
மலை கிராமத்தில் இரவில் பிரசவ வலியில் துடித்த பழங்குடி பெண்ணை காப்பாற்றிய மருத்துவக்குழு
ADDED : மே 10, 2024 02:40 AM
தேன்கனிக்கோட்டை;கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த குல்லட்டி கவுண்டனுார் மலை கிராமத்தில் அதிகளவில் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தை சேர்ந்தவர் கெண்டன். இவர் மனைவி ருத்ரி, 20; நிறைமாத கர்ப்பிணி. நேற்று முன்தினம் இரவு அவருக்கு ரத்த அழுத்தமும், பிரசவ வலியும் ஏற்பட்டுள்ளது.
கெலமங்கலம் வட்டார மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் மருத்துவக் குழுவினர் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்களில் குல்லட்டி கவுண்டனுார் கிராமத்திற்கு இரவில் விரைந்து சென்றனர். குல்லட்டி கவுண்டனுார் செல்லும் சாலை, மிகவும் ஆபத்தான கரடு முரடானது மட்டுமின்றி, இரவு நேரத்தில் யானைகள், காட்டெருதுகள் சுற்றித்திரியும். இருப்பினும் மருத்துவக் குழுவினர் அப்பாதை வழியே நடமாடும் ஆம்புலன்சில் சென்றனர். ஆம்புலன்ஸ் வாகனத்தில் ருத்ரிக்கு பிரசவம் பார்த்தனர்.இதில், அவருக்கு, 2 கிலோ எடையுடன் அழகிய பெண் குழந்தை பிறந்தது. ருத்ரிக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால், ஆம்புலன்சில் உனிசெட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று, முதலுதவி சிகிச்சை அளித்த பின், ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை அளித்த டாக்டர்கள் குழுவினருக்கு மலை கிராம மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.