/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிமென்ட் பூச்சு பெயர்ந்து சேதமான மின்கம்பம் மாற்றம்
/
சிமென்ட் பூச்சு பெயர்ந்து சேதமான மின்கம்பம் மாற்றம்
சிமென்ட் பூச்சு பெயர்ந்து சேதமான மின்கம்பம் மாற்றம்
சிமென்ட் பூச்சு பெயர்ந்து சேதமான மின்கம்பம் மாற்றம்
ADDED : ஆக 09, 2024 03:22 AM
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து எர்ரம்பட்டி, திப்பம்பட்டி வழியாக சிப்காட்டுக்கு செல்லும் சாலை உள்ளது. இதில், நாள் ஒன்றுக்கு, 1,000க்கும் மேற்பட்டோர் சிப்காட்டி-லுள்ள நிறுவனங்களுக்கு டூவீலரில் பணிக்கு செல்கின்றர். அதேபோல் ஒப்பந்த அடிப்படையில் செல்லும் பஸ்கள், பொது-மக்கள் என, 2,000க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். திப்பம்பட்டி கிராமத்தில் சாலையின் குறுக்கே செல்லும், 11 கே.வி., மின்கம்பிகளை இணைக்கும் வகையில், சாலையின் இரு-புறங்களிலும் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் சிமென்ட் பூச்சு பெயர்ந்து முற்றிலும் சேதமாகிய நிலையில் இருந்தது. ஏதேனும் பெரியளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன், சேதமான மின்கம்பங்களை அகற்றி, புதிய மின்கம்பங்களை அமைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த செய்தி, படம் கடந்த, 1ம் தேதி, 'காலைக்கதிர்' நாளிதழில் வெளி-யானது.
இதன் எதிரொலியாக மின்வாரியத்துறையினர் சாலையின் இட-துபுறம் இருந்த சேதமான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பத்தை அமைத்துள்ளனர். ஆனால், சாலையின் மற்றொரு புறமுள்ள மின்கம்பத்தை மாற்றாமல் அப்படியே விட்டுள்ளனர். அதன் அடிப்பாகம் முதல் மேல் பாகம் வரை, சிமென்ட் பூச்சு உதிர்ந்து வலுவிழந்த நிலையில் உள்ளது. அக்கம்பத்தையும் மாற்ற வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.