/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குப்பைக்கு வைத்த தீ பரவி கார்கள் கருகின
/
குப்பைக்கு வைத்த தீ பரவி கார்கள் கருகின
ADDED : பிப் 28, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பத்தலப்பள்ளி மார்க்கெட் பின்புறம், தக்காளி மார்க்கெட் உள்ளது. இதற்கு பின்னால், குமுதேப்பள்ளி காந்தி நகரிலுள்ள 'மஹிந்திரா' கார் ஷோரூமிற்கு சொந்தமான, 100க்கும் மேற்பட்ட புதிய கார்கள் நிறுத்தி வைக்கும் யார்டு உள்ளது.
நேற்று மதியம், 12:30 மணிக்கு, தக்காளி மார்க்கெட்டில் இருந்த குப்பைக்கு யாரோ தீ வைத்துள்ளனர்.
கொளுந்து விட்டு எரிந்த தீ, அருகே யார்டிலும் பரவியது. இதில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, இரண்டு எக்ஸ்.யு.வி., ரக புதிய கார்கள் தீக்கிரையாகின. ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.

