sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தலை நசுங்கி கல்லுாரி மாணவர், மாணவி பலி

/

தலை நசுங்கி கல்லுாரி மாணவர், மாணவி பலி

தலை நசுங்கி கல்லுாரி மாணவர், மாணவி பலி

தலை நசுங்கி கல்லுாரி மாணவர், மாணவி பலி


ADDED : ஆக 07, 2024 08:14 PM

Google News

ADDED : ஆக 07, 2024 08:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சின்ன எலசகிரி ஆனந்த் நகரை சேர்ந்தவர் சஞ்சய், 18, ஓசூர் தனியார் கல்லுாரியில், பி.காம்., இரண்டாமாண்டு படித்து வந்தார்; ஓசூர் கே.சி.சி., நகரை சேர்ந்தவர் மரியா சில்வியா, 18, கர்நாடகா மாநிலம், மாலுார் கல்லுாரியில், பி.காம்., இரண்டாமாண்டு படித்து வந்தார்.

நண்பர்களான இருவரும் ஹெல்மெட் அணியாமல், கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், 'டி.வி.எஸ்., அப்பாச்சி' பைக்கில் நேற்று மாலை சென்றனர். சூளகிரி அடுத்த ஒட்டையனுார் பஞ்., அலுவலகம் அருகே மாலை, 4:30 மணிக்கு வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியது.

தடுமாறி பைக்கிலிருந்து சாலையில் விழுந்த சஞ்சய் மற்றும் மரியா சில்வியா ஆகியோரின் தலை மீது வாகனம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்.

சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us