sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பெண் பாலியல் பலாத்கார விவகாரம் போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட காமுகன் சிகிச்சைக்கு சென்னைக்கு அனுப்பி வைப்பு

/

பெண் பாலியல் பலாத்கார விவகாரம் போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட காமுகன் சிகிச்சைக்கு சென்னைக்கு அனுப்பி வைப்பு

பெண் பாலியல் பலாத்கார விவகாரம் போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட காமுகன் சிகிச்சைக்கு சென்னைக்கு அனுப்பி வைப்பு

பெண் பாலியல் பலாத்கார விவகாரம் போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட காமுகன் சிகிச்சைக்கு சென்னைக்கு அனுப்பி வைப்பு


ADDED : பிப் 23, 2025 04:18 AM

Google News

ADDED : பிப் 23, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மலையின் மேல், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில், போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டவர், மேல்சிகிச்சைக்காக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கிருஷ்ணகிரியில் கடந்த, 19 ல், புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புற-முள்ள மலை பகுதிக்கு சென்ற, 35 வயது பெண்ணை, 4 பேர் கொண்ட கும்பல் கத்திமுனையில் மிரட்டி, நகை, பணத்தை பிடுங்கியது. இதில் இருவர், அப்பெண்ணை பாலியல் பலாத்-காரம் செய்த நிலையில், 2 பேர் அதை மொபைலில் வீடியோ எடுத்தனர். இது தொடர்பாக, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் கடந்த, 20ல் கலையரசன், 21, அபிஷேக், 20, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள், தர்மபுரி சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் கிருஷ்-ணகிரி அடுத்த பொன்மலைக்குட்டை பெருமாள் கோவில் பின்-புறம் பதுங்கி யிருந்த சுரேஷ், 23, என்பவரை, வலது காலில் சுட்டு, போலீசார் பிடித்தனர். போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்றபோது நாராயணன், 23, என்பவர் தவறி விழுந்து, அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காயமடைந்த இரு-வரும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்-டனர். நாராயணனுக்கு மாவு கட்டு போடப்பட்ட நிலையில், சேலம் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.

முக்கிய குற்றவாளியான சுரேசின் வலது கால் முட்டியில் குண்டு பாய்ந்துள்ளதால்,

அவருக்கு ரத்தப் போக்கு நிற்கவில்லை. மேல்சிகிச்சைக்காக, நேற்று சென்னை ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்-கப்பட்டார். அவருக்கு காலில் ஆப்பரேஷன் நடக்கவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சுரேசின் மொபைலில், கல்லுாரி மாணவியர் உட்பட பல இளம்-பெண்களை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். கைதானவர்கள் மீது, ஏற்க-னவே கிருஷ்ணகிரி டவுன், தாலுகா ஸ்டேஷனில், 2 வழக்குகள் உள்ள நிலையில், தற்போதைய வழக்கில், மேலும் பாதிக்கப்-பட்ட சிலரை சேர்க்கவுள்ளதாகவும், போலீசாரை கத்தியால் தாக்-கிய சுரேஷ், நாராயணன் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்துள்-ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பெண்ணை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த விவகா-ரத்தில், குற்றவாளிகளை ஒரே நாளில் பிடித்து, நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பாராட்டு தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us