ADDED : மே 06, 2024 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை,: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று சித்திரை மாத தேய்பிறை பிரதோஷ பூஜை நடந்தது.
கோவில் கொடிமரத்தின் அருகிலுள்ள சிறிய நந்தி, கிளி கோபுரம் எதிரிலுள்ள அதிகார நந்தி, ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி சிலைகளுக்கு பால், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், தேன், எலுமிச்சை, இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. கோவில் வளாகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா, ஓம் நமச்சிவாய' என, பக்தி கோஷமிட்டும், சிவ வாத்தியங்கள் இசைத்தும் வழிபட்டனர்.