ADDED : ஜூன் 08, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த கொல்லப்பட்டியை சேர்ந்தவர் வித்யா, 23; பாப்பனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார். கடந்த, 3ல், பள்ளிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து வித்யாவின் தந்தை, ஊத்தங்கரை போலீசில் புகாரளித்தார். அதில், சென்னையில் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சந்துரு, 24 என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.