/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மோட்டார் கேபிள் ஒயர் திருடிய இருவருக்கு காப்பு
/
மோட்டார் கேபிள் ஒயர் திருடிய இருவருக்கு காப்பு
ADDED : ஜூலை 24, 2024 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி;வேப்பனஹள்ளி அடுத்த கோடிப்பள்ளியை சேர்ந்தவர் ராஜ்குமார், 45, விவசாயி; கடந்த, 22 அதிகாலை அவரது நிலத்திலிருந்த மோட்டார் கேபிள் ஒயரை இருவர் திருடி தப்ப முயன்றனர்.
இதை கவனித்த ராஜ்குமார் அவர்களை பிடித்து, வேப்பனஹள்ளி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள், முஸ்லீம்பூர் சபீர், 23, முகமது உசேன், 24 என தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, 120 மீ., மோட்டார் கேபிள் ஒயரை பறிமுதல் செய்தனர்.