ADDED : ஜூலை 17, 2024 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி;கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள சிறப்பு தாசில்தார் கோகுலகண்ணன் மற்றும் அலுவலர்கள், கடந்த, 14 இரவில், கே.ஆர்.பி., அணை அருகில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, துடுக்கனஹள்ளி பெரிய மாரியம்மன் கோவில் அருகில் நின்ற லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து அதிகாரிகள் புகார்படி கே.ஆர்.பி., அணை போலீசாரி மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்து, லாரி டிரைவர் மற்றும் உரிமையாளரை தேடி வருகின்றனர்.