sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தந்தையை கொன்று மகள் கடத்தல் போக்சோவில் கைதானவர் வெறி

/

தந்தையை கொன்று மகள் கடத்தல் போக்சோவில் கைதானவர் வெறி

தந்தையை கொன்று மகள் கடத்தல் போக்சோவில் கைதானவர் வெறி

தந்தையை கொன்று மகள் கடத்தல் போக்சோவில் கைதானவர் வெறி


ADDED : ஆக 04, 2024 10:27 PM

Google News

ADDED : ஆக 04, 2024 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே காமையூரைச் சேர்ந்தவர் முனிராஜ், 45. ஜெ.காருப்பள்ளி கூட்ரோடு அருகே ஒருவரது நிலத்தில் தங்கி, விவசாயம் செய்து வந்தார்; இவரின், 17 வயது மகளை, அப்பகுதி தொழிலாளி வெங்கட்ராஜ், 24, என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.

புகாரின்படி, தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்குப்பதிந்து வெங்கட்ராஜை கைது செய்தனர். கடந்த டிசம்பரில், ஜாமினில் வந்த வெங்கட்ராஜ், சிறுமியிடம் தொடர்ந்து பேசி வந்தார். இதை முனிராஜ் கண்டித்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு சிறுமியின் வீட்டுக்கு சென்ற வெங்கட்ராஜ், அவரை கடத்த முயன்றார். இதை முனிராஜ் தடுத்தார். இதனால், அவரை கட்டையால் தலையில் தாக்கி விட்டு, சிறுமியை கடத்தி சென்றார். முனிராஜ், அதே இடத்தில் பலியானார். சிறுமியுடன் தலைமறைவான அந்த வாலிபரை, கெலமங்கலம் போலீசார் தனிப்படை அமைத்து தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us