ADDED : செப் 05, 2024 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த தளிஹள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசன், 35; இவர் கடந்த, 2ல் கிருஷ்ணகிரி டான்சி வளாகத்திலுள்ள ஹோண்டா பைக் ஷோரூம் முன், தன் பல்சர் பைக்கை நிறுத்தி சென்றார்.
அங்கு வந்த நபர், மாற்றுச்சாவியை போட்டு பைக்கை திருட முயன்றார். இதை கவனித்த வெங்கடேசன் அவரை வளைத்து பிடித்தார். விசாரணையில் அவர், கிருஷ்ணகிரி பாரதி நகரை சேர்ந்த இம்ரான், 28, என தெரிந்தது. அவரை, கிருஷ்ண-கிரி டவுன் போலீசார் கைது செய்தனர். அதேபோல கடந்த மாதம், 31ல், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நிறுத்தியிருந்த ஹீரோ டீலக்ஸ் பைக்கை இம்ரான் திருடியது தெரிந்து, அவர் மீது மேலும் ஒரு வழக்கை போலீசார் பதிந்து விசாரிக்கின்றனர்.