sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

விவசாயியை அடித்து கொன்று மகளை கடத்திய வாலிபர் கைது

/

விவசாயியை அடித்து கொன்று மகளை கடத்திய வாலிபர் கைது

விவசாயியை அடித்து கொன்று மகளை கடத்திய வாலிபர் கைது

விவசாயியை அடித்து கொன்று மகளை கடத்திய வாலிபர் கைது


ADDED : ஆக 05, 2024 11:49 PM

Google News

ADDED : ஆக 05, 2024 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே காமையூரை சேர்ந்தவர் முனிராஜ், 45, விவசாயி. ஜெ.காருப்பள்ளி கூட்ரோடு அருகே ஒருவரது நிலத்தில் தங்கி, விவசாயம் செய்து வந்தார்; இவரின், 17 வயது மகளை, ஜெ.காருப்பள்ளியை சேர்ந்த தொழிலாளி வெங்கட்ராஜ், 24, காதலித்தார். கடந்தாண்டு அக்., 23ல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த புகாரில், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்குப்பதிந்து வெங்கட்ராஜை கைது செய்தனர்.

கடந்த டிசம்பரில் ஜாமினில் வந்த வெங்கட்ராஜ், சிறுமியிடம் தொடர்ந்து பேசி வந்தார்; இதை முனிராஜ் கண்டித்தார். கடந்த, 3ம் தேதி நள்ளிரவு சிறுமியின் வீட்டுக்கு சென்ற வெங்கட்ராஜ், அவரை கடத்த முயன்றார். இதை தடுத்த தந்தை முனிராஜை, கட்டையால் தாக்கி விட்டு, சிறுமியை கடத்தி சென்றார். தலையில் படுகாயமடைந்த முனிராஜ், அதே இடத்தில் பலியானார்.

கெலமங்கலம் போலீசார், கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் பகுதியில் பதுங்கியிருந்த வெங்கட்ராஜை, கைது செய்தனர். அவரிடமிருந்து விவசாயி முனிராஜின் மகளை மீட்டு விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us